Sunday 27 December 2015

உடல் நலம் பெற

உடல் நலம் பெற: குறைந்த செலவில், எளிய செய்முறையில், நிறைந்த பலன்களை அளிக்கும் அற்புத பானம்!

தேவை: காரட்-1, பீட்ரூட்-1, ஆப்பிள்–1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு-1.

செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி, ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:
* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது
* கல்லீரல், கணையம், சிறு நீரக வியாதிகளை தடுக்கிறது
* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது
* இதயத் தாக்குதல், உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது
* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது
* பார்வைத் திறனை அதிகரிக்கிறது.
* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது
* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.
* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது
* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது
* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது
* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது
* பக்க விளைவுகள் ஏதுமில்லை
* சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது
* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அருந்தும் விதம்:  - காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.  அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்.  அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

No comments:

Post a Comment