Saturday 12 December 2015

பிரதோஷ விரதம்கடைப் பிடிக்கும் முறை

பிரதோஷ விரதம்கடைப் பிடிக்கும் முறை

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.

பிரம்ம முராரி ஹுரார்ச்சி லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜென்மஜ துக்க விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்

நம் பாவத்தைப் போக்கி குறை உடைய மனித வாழ்வை நிறை உடையதாய் மற்றவே நாம் கடவுளை வணங்குகின்றோம். சிவனுக்கு செய்யப்படும் பூஜைகளில் பிரதோஷத்தின் போது செய்யப் படும் பூஜை சிறப்பானதாகும் .

பிரதோஷ தினங்களில் உபவாச மிருத்தல் நன்மை பயக்கும் பிரதோஷ வழி பாட்டால்கிட்டும் பலன்கள் :

நோய் நீங்குதல் ,கடன் நீங்கி தனம் பெறுதல் ,துன்பம் நீங்கி இன்பம் பெறுதல் ,முக்தி அடைதல் ,பாவம் நீங்கி புண்ணியம் பெறுதல் ,மழலை செல்வம் கிட்டுதல் ,அறியாமை நீங்கி ஞானம் பெறுதல் ,செல்வச் செழுமை ஆகியஅனைத்து நன்மைகளும் நம்மை நாடிவரும் .

பிரதோசங்களில் சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் ஆலயம் சென்று வழிபட்டால் ,ஒருவருடம் தினமும் சென்று வழிபட்ட பலன் கொடுக்கும் பிரதோஷ வேளை என்பது மாலை மணி நான்ங்கு முப்பது முதல் ஆறு மணி வரையுள்ள காலமாகும் .

பிரதோஷ நேரத்தில் ஐந்து எழுத்து மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் .
ஓம் நம சிவாயபிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்
1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் - பல வளமும் உண்டாகும்
3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் - விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
6. நெய் - முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் - சுகவாழ்வு
10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

No comments:

Post a Comment