Thursday 26 May 2016

உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க

உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க உங்கள் மனைவி எப்படி அமைவார்கள் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்...

பொதுவாக திருமணம் செய்யும் பொழுது, ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களின் பிறந்த தேதியை வைத்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள்.
அதேபோன்று, பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1,10,19,28 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும், 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம்.
இவர்கள், 1 ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். 1 எண் சூரியன் காரண்ம, சூரியன் (பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.

திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.

2,11,20,29 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7 ந் தேதி பிறந்த பெண்ணேமிகவும் சிறந்தவள்.
ஆனால், 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1 ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 16 மற்றும் 25 தேதிகளும் 24, 7, மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.

3,12,21,30 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.

2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

4,13,22,31 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.

இருப்பினும் 4 ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.

இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

5,14,23 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.

1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, ஆகிய தேதிகளும் 28, கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.
மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.

குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

6,15,24 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.
1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3 ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.

7,16,25 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.
8 ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9 ம் எண் நடுத்தரமானதுதான்.

8,17,26 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.8 ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது. 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9 ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.
திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

9,18,27 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.

2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமண நாளின் எண்கள் 3, 1 ஆகியவை வந்தால் 6, 9, குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

Wednesday 25 May 2016

விநாயகர் வழிபாட்டுமுறை

விநாயகர் வழிபாட்டுமுறை

விநாயகரை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் தனது நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளை சிதறச் செய்ய வேண்டுமென பணிவாக கேட்க வேண்டும்.

அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.

#தலையில் குட்டிக்கொள்ளுதல்

அகத்தியர் வடநாட்டில் இருந்து தென்இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார்.

பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.

அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார்.

தன் தவறுக்கு வருந்திய அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.

நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும்.

#தோப்புக்கரணம் போடுதல்

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அசுரனை அழித்து தேவர்களைக் காத்தார்.

அதனால் தேவர்கள் விநாயகரை பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு வழிப்பட்டனர். அது முதல் அதுவே விநாயகர் வழிபாட்டில் ஒன்றானது.

தோப்புக்கரணம் போடுவது மூட்டு மற்றும் கால்களுக்கு வலிமை உண்டாகும்.

#சிதறுகாய் உடைத்தல்

காசியப முனிவரின் மகனாக விநாயகர் மகோற்கடர் என்ற பெயரில் அவதரித்தார். ஒரு நாள் யாகத்திற்கு சென்ற போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.

விநாயகர் யாகத்திற்கு கொண்டு சென்ற கலசங்களின் மீதிருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி அவனை பொடிப்பொடியாக்கினார்.

தனக்கு வந்த தடையைத் தேங்காய் வீசி எறிதன் மூலம் தகர்த்ததால், நமக்கு வரும் தீவினைகளும் சிதற சிதறுகாய் உடைத்து விநாயகரை வழிபடும் முறை உருவானது.

#அருகம்புல் மாலை

அனலாசுரன் என்ற அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி எரித்து விடுவான்.

விநாயகர் மக்களைக் காக்கும் பொருட்டு அனலாசுரனுடன் போரிட்டார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

எனவே கோபத்தில் அவனை விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.

விநாயகரை குளிர்விக்க குடம்குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.

உடனே முனிவர் ஒருவர் அருகம்புல்லை தலையில் வைத்து வழிபட்டார். விநாயகரின் எரிச்சல் அடங்கியது.

அது முதல் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாதது ஆகிவிட்டது.

லக்ஷ்மி கடாட்சம் பெருக சில யோசனைகள்

லக்ஷ்மி கடாட்சம் பெருக சில யோசனைகள்

• அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று
பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது  ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் , முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் . அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

• அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

• அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது , தன் வலது உள்ளங்கையையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.

• செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி
திருமகளை வழிப்பட வேண்டும்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோசமும் பெருகும்.

• ஒவ்வொரு பௌர்ணமி  அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

• வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே
அவர்களுக்குச் சேர வேண்டும், முடிந்தால் அவர்களுக்கு புதியதாக
வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில .........

• ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில்
நின்று கொடுக்க கூடாது . கொடுப்பவரும் , வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

• வாசற்படி, அம்மி,ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

• இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

• வெற்றிலை  வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது
வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

• சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

• குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும்
அணைக்ககூடாது . புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

• வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும்
கூறக்கூடாது

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது

• துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

• உப்பைத் தரையில் சிந்தக் கூடாது .

• ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.
ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

• வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.  நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

• சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு,
யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு
மிகவும் பிடித்தவை.

• தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

• பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி

•வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

• செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள்
வளர்க்கலாம்.

• சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

• காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

• தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

• வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

• மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

• ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை
செய்யுங்கள்.

• எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

• எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில்
பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோஷமும் பெருகும்.

• எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப்
பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.

• சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில்
மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

• தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

• குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை
உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

• அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

• பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

• அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

• வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

• வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்
கூடாது.

• மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக்
கூடாது.

• விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக்
கொடுக்கக் கூடாது.

• விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

• கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில்கோலம்
இடுவது அவசியம்.பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின்டோர்
வாசலில் கோலம் வரையலாம்.

• வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

• பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவேண்டும்.

• வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

•அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது. நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

• பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

• சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

• ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

• தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.

• பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி
படங்கள் மீது விழக்கூடாது

• தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்து விடுகிறாள்.

இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்

சகலதேவதா போற்றி வழிபாடு மந்திரம்

சகலதேவதா போற்றி வழிபாடு மந்திரம்.

எல்லா கடவுள்களின் போற்றி.
தினமும் சொல்ல 1000
கோடி கோவிக்கு சென்ற பலன் கிடைக்கும்

ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பக விநாயகனே போற்றி
ஓம் ஸ்ரீ கஜமுகனே போற்றி
ஓம் ஸ்ரீ கந்தா போற்றி
ஓம் ஸ்ரீ கடம்பா போற்றி
ஓம் ஸ்ரீ இடும்பா போற்றி
ஓம் ஸ்ரீ கபாலீஸ்வரா போற்றி
ஓம் ஸ்ரீ ருத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சிவனே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பகத்தாயே போற்றி
ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரீயே போற்றி
ஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே போற்றி
ஓம் ஸ்ரீ நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாஸுதேவனே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீ வைதீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அண்ணாமலையானே போற்றி
ஓம் ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜனே போற்றி
ஓம் ஸ்ரீ சரபேஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ நந்தீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அதிகார நந்தியே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ பெருமாளே போற்றி
ஓம் ஸ்ரீ சத்திய நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தான கோபாலனே போற்றி
ஓம் ஸ்ரீ கோவிந்தனே போற்றி
ஓம் ஸ்ரீ கிருஷ்ணா போற்றி
ஓம் ஸ்ரீ ராமா போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவா போற்றி
ஓம் ஸ்ரீ சுதர்ஸனா போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரியே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா போற்றி
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஆதியந்தப்பிரபுவே போற்றி
ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சரஸ்வதியே போற்றி
ஓம் ஸ்ரீ மீனாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ அன்னபூரணியே போற்றி
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ அபிராமியே போற்றி
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ பத்ரகாளியே போற்றி
ஓம் ஸ்ரீ ச்யாமளாவே போற்றி
ஓம் ஸ்ரீ பிரத்யங்கராவே போற்றி
ஓம் ஸ்ரீ வாராகியே போற்றி
ஓம் ஸ்ரீ சாகம்பரியே போற்றி
ஓம் ஸ்ரீ மாரியம்மாவே போற்றி
ஓம் ஸ்ரீ மூகாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சூலினியே போற்றி
ஓம் ஸ்ரீ பவானியே போற்றி
ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தோஷிமாதாவே போற்றி
ஓம் ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் ஸ்ரீ சப்த கன்னிகளே போற்றி
ஓம் ஸ்ரீ திருவிளக்கே போற்றி
ஓம் ஸ்ரீ துளசியே போற்றி
ஓம் ஸ்ரீ சூரியனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ அங்காரகனே போற்றி
ஓம் ஸ்ரீ புதனே போற்றி
ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சுக்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகுவே போற்றி
ஓம் ஸ்ரீ கேதுவே போற்றி
ஓம் ஸ்ரீ நாரதா போற்றி
ஓம் ஸ்ரீ இந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ வருணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாயுவே போற்றி
ஓம் ஸ்ரீ அக்னியே போற்றி
ஓம் ஸ்ரீ குபேரா போற்றி
ஓம் ஸ்ரீ யமனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திரா போற்றி
ஓம் ஸ்ரீ வாஸ்து தேவனே போற்றி
ஓம் ஸ்ரீ நாகராஜாவே போற்றி
ஓம் ஸ்ரீ வீரபத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ பைரவா போற்றி
ஓம் ஸ்ரீ மாக்கண்டேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஐயனாரே போற்றி
ஓம் ஸ்ரீ முனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ கருப்பண்ணசாமியே போற்றி
ஓம் ஸ்ரீ மதுரைவீரனே போற்றி
ஓம் ஸ்ரீ அகத்திய ரிஷியே போற்றி
ஓம் ஸ்ரீ ஆதிசங்கரனே போற்றி
ஓம் ஸ்ரீ அறுபத்திமூவர்களே போற்றி
ஓம் ஸ்ரீ ஆழ்வார்களே போற்றி
ஓம் ஸ்ரீ மகரிஷிகளே போற்றி
ஓம் ஸ்ரீ சித்தர்களே போற்றி
ஓம் ஸ்ரீ வேதங்களே போற்றி
ஓம் ஸ்ரீ உபநிஷத்துகளே போற்றி
ஓம் ஸ்ரீ இதிகாச புராணங்களே போற்றி
ஓம் ஸ்ரீ காமதேனுவே போற்றி
ஓம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனாவே போற்றி
ஓம் ஸ்ரீ ஆயுர்தேவீயே போற்றி
ஓம் ஸ்ரீ சகலதேவதா போற்றி போற்றி