Thursday 17 December 2015

மௌன வித்தை ( பேசா மந்திரம் ) ரகசியம்

மௌன வித்தை ( பேசா மந்திரம் ) ரகசியம் !!!

மந்திரங்களில் பேசும் மந்திரம், பேசா மந்திரம்
என்றநிலைகள் உண்டு. பேசா மந்திரம்
என்னவென்றுதெரிந்தவர்கள் ஞானிகள்
என்கின்றனர் சித்தர்கள்.

பேசா மந்திரத்தை மௌனம் என்று குறியீட்டின்
மூலம்சித்தர்கள் தங்கள் பாடல்களில்
குறிப்பிடுகின்றனர்.
1882 ல் வெளியிடப்பட்ட சட்டைமுனி நாயனார்
முன்ஞானம், பின் ஞானம் என்ற புத்தகத்தில்
சட்டைமுனிநாயனார் பின்ஞானம் என்ற
பாகத்தில் பேசா மந்திரம்எனப்படும் இந்த
மௌன வித்தை பற்றி குறிப்பிடப்பட்ட
ிருக்கிறது.
மௌனவித்தை யாருக்கு யார் கொடுத்தார்கள்
என்பதைகீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன.

“கிட்டினோங் கைலாய பரம்பரையினாலே
கேளுமக்களாலாச்சாpயங் கொங்கணா; தான்
சென்று,கிட்டினோ மென்று சொல்லியீசானத்தே
கெடியானரசமுண்டு சட்டைபோக்கிக்,
கிட்டினோ மீசானந்துதித்தோ மென்று
கெடியாக தவசிருந்து முத்தனாகி,கிட்ட
ினோமென்று சொல்லி தசஷணாமூh;த்தி
பதம்பிடித்து பணிந்திட்டாரே”

“தவம் பல செய்து கர்மவினைகளை கழித்து,
ஒன்பதுவாசலை அடைத்து பத்தாவது
வாசலைத் திறந்து,அமுதத்தை பருகி,
கயிலாயம் சென்று தசஷணாமூ;த்திபாதம்
பணிந்து, ஞானத்தை அடையக் கூடிய
வழியைஎனக்;குக் காட்டுங்கள்” என்று
கொங்கணர் வேண்டினார.;

“பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாயன்
பாருலகிற்பிறந்தவனோவிப்படி தானானாய்,
மணிந்திட்டச் சடம்போக்கிக் கைலாயத்
தேகமானதுதான் வெகுகடினமதிகமெத்த,
கனிந்திட்ட கனிவாலே வீறத்தாலேகலங்காமற்
சமாதியுற்று கயிலாயத்திற், றணிந்திட்ட
புத்திகொண்டுயிங்கே வந்தாய்
சாதகமாயொருவரைங்கண்டிலேனே”

கால்களில் வீழ்ந்த கொங்கணரைப் பார்த்து,
தசஷணாமூர்த்திமனிதர்கள் வாழக்கூடிய
பூவுலகில் பிறந்து தவங்கள் பலசெய்து
சித்திகள் பல பெற்று எப்படி இந்த
நிலையைஅடைந்தாய். மனிதர்கள் இறந்தால்
அவர்கள் தங்கள்உடலை உதிர்த்து விட்டு
செய்த தவப் பயனால்; உயிராகத்தான் இந்த
கயிலாய மலையை அடைய
முடியும்.அத்ததைகய நிலை பெற்றவர்கள்
தான் இந்த கயிலாயமலைக்கு அதிகமாக
வந்தவர்கள். ஆனால் நீ ஜீவசமாதிஅடைந்த
பின்பு உடலை ஜீவசமாதியில் வைத்து
விட்டுஉயிராக இந்த கயிலாய மலைக்கு
எப்படி வந்தாய், இப்படிவந்த ஒருவரையும்
நான் இதுவரை கண்டதில்லை
என்றுதசஷணாமூர்த்தி கூறுகிறார்.

”கண்டிலேனாச்சாயங்கமா ரனேபாருங்கலந்தந
ற்சென்மமிவா; கைலாயமானா;,
ஒண்டிபேநாலதுக்கு மகத்து
வந்தானென்னவுற்ற சிவ விந்துவின்னிலப்
படிதானாச்சு, கன்டிலேனிவரைப்
போற்சித்தா;காணேன் காரணமாயிவனுக்கு
தீசஷிப் பேனான்,பண்டிலேன் கொங்கணரை
மயங்க வேண்டாம்பரம்பரமாய் வந்து தந்த
மௌணந்தானே”

இது எவ்வளவு பெரிய ஆச்சரியம . இந்த
ஜென்மத்திலேயேகர்மவினைகளை கழித்து
கயிலாயம் வந்திருக்கிறார்.கயிலாயம் வர
வேண்டுமென்றால், விந்து நாதம,
இரண்டுஎட்டு, இடகலை பிங்கலை,
ஆகியவற்றின் பொருள் தெரியவேண்டும்.

மேலும் சிவனின் விந்து என்று
சொல்லப்படுவது எது என்ற ரகசியமும்
தெரிந்திருக்க வேண்டும்.இவர் கயிலாயம் வர
முக்கிய காரணம் சிவ விந்துவின்ரகசியம்
தெரிந்து, அதன் வழி நடந்திருப்பதனால்
தான்இவர் கயிலாயம் வர முடிந்தது.
இவ்வளவு சிறப்புகள்வாய்ந்த கொங்கணரைப்
போல ஒரு சித்தரை நான்கண்டதில்லை என்று
அவருக்கு ஞானம் அடைவதற்கு உரியவழியை
சொல்லி தீட்சை கொடுத்தார். அந்த ரகசியம்
தான்பேசா மந்திரம் எனப்படும் மௌன வித்தை
எனப்படுகிறது.இந்த மௌன வித்தை சித்தர்
பரம்பரை என்றுசொல்லப்படும் குரு சீடன்
பரம்பரையாக ஒருவர் மாறிஒருவராக வந்து
கொண்டேயிருக்கிறது.

”மௌனவித்தை மூலருக்கு முன்னே
சொன்னேன்மருவியவா காலாங்கிக்கதுவே
சொன்னா், மௌனவித்தைகாலாங்கி போகருக்கு
சொன்னா;

மகத்தானபோகருந்தானுனக்குச்
சொன்னா; மவுனவித்தையகண்டாதியறிந்து
கொள்ளு மற்றொன்று மயக்க
மற்றுமௌனத்தாh;க்கு, மௌனவித்தை
யெய்தாக் கால்வனேஞானி வாய் திறந்து
பேசாதே மகாரம் நன்றே”

கொங்கணர் பேசா மந்திரம் எனப்படும்
மௌனவித்தையைதிருமூலருக்கு சொன்னார.
திருமூலர் காலங்கிநாதருக்குசொன்னார்;
காலங்கி நாதர் போகருக்கு சொன்னார்;
போகர்உனக்குச் சொன்னார் என்று சட்டைமுனி
நாயனாரைக்குறிப்பிடுகிறார். மௌன வித்தை
என்ன என்பதை கண்டுகொள்ள வேண்டும்
மௌன வித்தையைக் கண்டுகொண்டால்
மட்டுமே இவ்வுலக மாயையிலிருந்து
தப்பிக்கமுடியும். ஞான வழியைக்
காட்டுகிறேன் என்று சொல்லும்ஏமாற்று
வித்தைக் காரர்களிடமிருந்து விலகி
இருக்கமுடியும் மௌன வித்தை என்று
சொல்லப் படுகிற பேசாமந்திரத்தை தெரிந்து
கொண்டு, அதனை செயல்படுத்துபவனே ஞான
நிலையை அடைய முடியும். அவனேஞானி
என்று அழைக்கப்படுகிறான்; அகாரம்; உகாரம்;
மகாரம்என்று அழைக்கப்படுகிற மூன்றில்
பேசா மந்திரம் மகாரம் மஎன்ற எழுத்தால்
குறிக்கப்படுகிறது என்று கொங்கணர்சொல்கிற
ார்.
மௌன வித்தையின் சிறப்புகள் பற்றி
கீழ்க்கண்ட பாடல்கள்விளக்குகின்றன:

”சித்தாகுஞ் சித்தியுமாமெட்டெட்டு மாடுந்
திறமாகநின்றவா;க்;கு மந்திரஞ்சித்தி பத்தாகும்
வேதத்தில்மந்திரத்தைப் பாவி பல பலெனப்
பேசியவா;சேவிப்பா; கோடி கத்தாதும் நாய்
போலே கற்றியென்னகாசிக்கு மாகாது
சித்தியில்லை, முத்தான மௌனம்விட்டால்
மௌனம் பாழாச்சு மோசமிந்தவேதமெல்லாம்
பொய்யென்பாரே”

மௌன வித்தை தெரிந்தவருக்கு மட்டும் தான்
மந்திரங்கள்எல்லாம் சித்தியாகும் வேதங்களில்
உள்ள மந்திரங்களைஉச்சாடணம் செய்து கோடி
முறை உரு ஏற்றினாலும், நாய்போல
உலகமெல்லாம் சுற்றினாலும், காசி
போன்றபுனிதமான இடங்களுக்குச்
சென்றாலும் மந்திரங்கள்சித்தியாகாது.
கடவுள் நிலை உணர முடியாது.
மௌனவித்தை தெரியாதவருக்கு, வேதங்களில்
உள்ள ரகசியங்கள்தெரியாது. வேதங்களில்
உள்ள ரகசியங்கள் தெரியாதகாரணத்தினால,;
வேதங்களே பொய் என்பர்.

”பொய்யென்று யெண்ணியெண்ணி
யுலகங்கெட்டுப்போச்சப்பாவதனாலேயுக
பேதமாச்சு, கையென்றுயோகத்தில்
மௌனமுட்ட கடுஞ்சித்தியறிவ
ு மட்டுங்கலந்துதாக்கு, கையென்ற நி;த்தமப்பா
ஆறிற்காணுஞ்சாதகமாய் மேல்மூலந்தாண்டி
க்காணும், மெய்யென்றுபிடித்தாக்காலவனே
யோகி விரைந்துயிதையறியாவிட்டால்
விருதமாடே”

மௌன வித்தை தெரியாத காரணத்தினால்,
புராணங்கள்,உபநிஷத்துக்கள் ஆகியவைகளில்
உள்ள கருத்துக்களைப்புரிந்து கொள்ள
முடியவில்லை. கடவுள் என்றால்
என்னஎன்றும,; கடவுளை அடையக் கூடிய
வழி எது என்றும்கேட்பவர்களுக்கு சரியான
விளக்கங்கள் கொடுக்கமுடியவில்லை.

அதனால் கடவுள் உண்டா இல்லையா
என்றநிலை உருவாகி, ஆத்திகர,; நாத்திகர் என்ற
பிரிவுஉண்டாகி உலகம் இரண்டாகி பிளவு
பட்டு நிற்கிறது. மௌனவித்தையை தெரிந்து
ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்றுபிரம்மரந்
திரத்தில் தன் ஜீவனை இணைப்பவனே
யோகி.இதை அறியாவிட்டால் ஒன்றுக்கும்
உதவாத மாட்டுக்குச்சமம் என்கிறார்
சட்டைமுனி நாயனார்.

”நன்றான மௌனத்திற் கடிகை சேர
நல்வினையுந்தீவினையும் நாசமாகும்,
நன்றான மௌன மென்றுநினைக்க முத்தி
நல்லோ;கள் நினைப்பா;கள் மற்றோ;காணா;,
நன்றான மௌனமல்லோ ஷிகள்
சித்தா;நாலுதிக்குஞ் சொரூபத்தைக் கண்டா;
கண்டா, நன்றானமௌனமல்லோ சாத்திரங்கள்
தோறும் நலமாகக்கூப்பிடுது கண்டிலாரே”

மௌன வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே
அதைசெயல்படுத்தி கர்ம வினை என்று
சொல்லப் படுகிற பாவபுண்ணியங்களை
கழிக்க முடியும்; பாவ புண்ணியங்களைக்க
ழித்தால் மட்டுமே முக்தி அடைய முடியும்;
அதனால்மௌன வித்தை தெரிந்தவர்களால்
மட்டும் தான் முக்திஅடைய முடியும்
என்பதை உணர வேண்டும்.

மற்றவர்கள்எந்த
வழிகளில் முயற்சி செய்தாலும் முக்தி
அடையமுடியாது. மௌன வித்தை
தெரிந்ததால் தான் சித்தர்கள்அனைத்திலும்;
அதாவது துhணிலும், துரும்பிலும்,கட
வுளைக் கண்டனர். வேதங்கள், உபநிஷத்துகள்
மற்றும்அனைத்து சாத்திரங்களும் கூறுவது,
மறை பொருளாகவிளக்குவது, குறியீடுகளாகக்
குறிப்பிடுவது இந்த மௌனவித்தையைத் தான்
என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர்
என்கிறார் சட்டைமுனி நாயனார்.

”கண்டிலா; மௌனத்திலனேக சித்தி
காணுமப்பாசொல்கிறே நன்றாய்க் கேளு,
மண்டிலா்; மந்திரங்கள்செபிக்கும் போது
அப்பனே மௌனமென்ற தீசைஷகேளு,
ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று
ஒருசேரை சமைத்துண்டு ஒரு போதப்பா,
விண்டிலாதென்னேரஞ் செபித்தாயானால்
விளங்கியதோரேழுலஷமந்திரமுஞ் சித்தே”
மௌனவித்தை தெரிந்து செய்தால் அஷ்டமா
சித்தி உட்படபல்வேறு சித்திகளும் கிடைக்கும்
என்பதை அறியாமல்இருக்கிறார்கள்.

மௌனவித்தையின் சிறப்புகளைசொல்ல
ுகிறேன் கேள், நீ மந்திரங்களைச் செபிக்கும்
போதுமௌன வித்தை தெரிந்தவர்களிடம,;
மௌனவித்தைதீட்சை உனக்கு சொல்லித்
தரும்படி கேள். தனியானஅமர்ந்து வார்ததை
எதுவும் பேசாமல் வாயை மூடிஅமைதியாக
மௌன வித்தையை தொடர்ந்து
செய்துகொண்டே இரு.
காலை, மதியம், மாலை, இரவு என்றுநேரம்
பார்க்காமல் எந்த நேரமும் தொடர்ந்து
செய்துகொண்டே இருப்பாயேயானால் ஏழு
லட்சம் மந்திரம்மட்டுமில்லை, அதற்கு
மேலும் மந்திரங்கள் சித்தியாகும்.மந்திரங்கள்
சித்தியாக வேண்டுமென்றால் மௌன
வித்தைதெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.

மௌன வித்தை என்பது சித்தர்கள் கலை.
அதுதகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க
வேண்டும்என்பதற்காகவே சித்தர்கள் தங்கள்
பாடல்களில் மௌனவித்தையை மறைத்து
வைத்திருக்கிறார்கள். மௌனவித்தையின்
ரகசியம் தெரிந்து, அதை செய்து வருகிற
ஒருசில பேர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.

முயற்சி, முன்வினை, ஆராய்ச்சி ஆகியவற்றின்
மூலமேஒருவர் மௌனவித்தையின்
ரகசியத்தை தெரிந்து கொள்ளமுடியும்
புழமொழிகளின் விளக்கத்தை சரியாக புரிந்து
கொள்ளவேண்டும் என்பதற்காகவே பின்வரும்
ஒரு பாடலின்விளக்கத்தை இங்கே தெரிந்து
கொள்வோம்.
திருமூலர் ”நாயோட்டு மந்திரம் நமனை
வெல்லும்” என்கிறார்.

நாயோட்டு மந்திரம் என்றால் நான் என்னும்
அகந்தையைஓட்டும் மந்திரம். நான் என்ற
அகந்தையை எந்த மந்திரமும்ஓட்டாது. மௌன
வித்தை என்ற பேசா மந்திரம் மட்டும்தான்
ஓட்டும். சாதாரண மந்திரங்களால் நமனை
அதாவதுஇறப்பை வெல்ல முடியாது.

நான் என்னும் அகந்தையை ஓட்டும் மௌன
வித்தைஎன்னும் பேசா மந்திரம் மட்டும் தான்
இறப்பை வெல்லும்.மேளன வித்தை என்னும்
பேசா மந்திரத்தைசொல்கிறவர்களுக்கு மரணம்
இல்லை என்பது தான் இதன்பொருள்.

No comments:

Post a Comment