Sunday, 3 January 2016

கருட வாகனம்

கருட வாகனம்

மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன். இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார்.

பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார்.

வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை (திருப்பதி) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். சப்தகிரி என்றால் ஏழு மலை. அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு, வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு.

கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காற்றே அதன் வாகனம்.

கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும். ஒவ்வொரு தினக்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.

ஞாயிறு – நோய் நீங்கும்

திங்கள் – குடும்பம் செழிக்கும்

செவ்வாய் – உடல் பலம் கூடும்

புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்

வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம்

வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்

சனி – மோட்சம் கிடைக்கும்.

கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான், இந்தியாவில் தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது.

No comments:

Post a Comment