Saturday 30 January 2016

எண் 8 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்! பிறப்பு முதல் இறப்பு வரை!

எண் 8 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்!
பிறப்பு முதல் இறப்பு வரை!

சனி நட்சத்திரம் பூசம், அனுசம், உத்திரட்டாதி

மனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். “சுவையாகஇருக்கிறது” என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு, அதன்பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலைஉடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில்அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும்.ஆனால் சாப்பிட்ட பின்பு மிகவும் இனிக்கும்.

மேலும் உடலின்ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும் சிறந்தது! இருப்பினும்நெல்லிக்கனியைச் சாப்பிடும்போது கசப்பு என்ற காரணத்திற்காகப்பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை!

அது மட்டுமன்று மனிதன் மற்ற எல்லாவற்றையும்விடத் தன்நாக்கிற்கே அடிமையாக இருக்கிறான்! நினைத்துப் பாருங்கள்!தொண்டைக்குக் கீழ் எந்த உணவுப் பொருள்கள், பானங்கள்சென்றாலும் ஒன்றுதான். நாக்கிற்கு கீழே சென்றுவிட்டால், எந்தப்பொருளுக்கும் எந்தச் சுவையும் இல்லை! இருப்பினும் மக்கள்தங்களின் உடல்நலம் பாராது நாக்கின் சுவைக்காகவே ருசியாகச்செய்து சாப்பிடுகிறார்கள். மக்களின் இரசனைதான் என்னே?

அதைப் போன்றே மற்ற 8 எண்களும், மனிதனை தூண்டிவிட்டுஅவனை இகலோக … வாழ்க்கையில் சுகங்களில் ஆழ்த்தி விடுகிறது!மனிதனும் தனக்கு யோகம் வந்துவிட்டது என்று மகிழ்கிறான்! ஆனால்சனிபகவான் ஒருவர்தன் மற்ற கிரகங்களின் தன்மையைக் கவர்ந்துஒருவன் மற்ற ஜென்மம் வரை தொடர்ந்து செய்த வினைகளைஆராய்ந்து, அவனது செயல்களுக்கு ஏற்ப முதலில் தீய பலன்களையும்,பின்பு நல்ல பலன்களையும் தவறாமல் கொடுத்துவிடுகிறார்! மற்றநவக்கிரகங்களைப் போல், சனீசுவரரை ப்ரீதி செய்து, எளிதில் இவரதுதண்டனையிலிருந்து தப்ப முடியாது!

8-ஆம் எண்ணில் பிறக்கும்போதே, மனிதன் விதியில் வசப்படுகிறான்,8-ம் எண் பிறவி எண்ணாக வரும் போது. வாழ்க்கையில் கடும்போராட்டத்தையும், உடலில் அல்லது மனத்தில் ஏதாவது சிறியநோயையும் கொடுத்து விடுகிறத.

ஆனால் விதி எண்ணாகவரும்போது, அவனது முயற்சிகளையும், ஊக்கத்தையும் தனதுகாலத்தில் (30 வயதுக்கு மேல்) கொடுத்து அவனைத் தடுமாற வைத்துவிடுகிறது! அவனது சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள்அனைவரிடமும் கெட்ட பெயர் அல்லது அவமானம் அடையநேரிடுகிறது! பின்பு அவனை தன்வழியே போராடும் குணத்தை 8 எண்வாரி வழங்குகிறது! புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய ஊர்என்று ஒரு புதிய அற்புத வழியைத் திறந்து விடுகிறது! எனவேமக்களும், தங்களது கடுமையான உழைப்பால் வாழ்க்கையின்உச்சியை 45 வயதுக்கு மேல் எப்படியும் அடைந்து விடுகிறார்கள்.இதுவே அனுபவ உண்மை ஆகும்.

பள்ளியில் தனது போதனையாலும் தேவைப்பட்டால்தண்டனையாலும் ஒரு மாணவனைச் சீர்திருத்தும் ஆசிரிய¬ப்போன்றவரே சனீசுவரராவார்.

எனவே 8ம் எண் விரும்பத்தக்கதேயன்றி வெறுக்கத்தக்கதன்று!
சில அன்பர்கள் கோடீசுவரர்கள் குடும்பத்தில் பிறந்திருப்பார்கள்.

இவர்கள் என்னதான் வசதி மிகுந்த நிலையில் வாழ்ந்திடினும்,வண்டுகள் துளைத்த மாங்கனியைப் போல் உள்ளக் குடைச்சல்கள்நிறைந்தவர்கள்! மனத்தில் ஏதாவது ஒரு சோகத்தையும்,வியாதியையும் வைத்துக் கொண்டு, மனதில் நிம்மதியில்லையே என்றுஅலைவார்கள். “பாசமாவது ஒன்றாவது. அது வீதயில்தான்கிடைக்கிறது” என்று புலம்புவார்கள்.

ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதைஅரித்துக்கொண்டே இருக்கும். குழந்தையில்லை, மனைவியால்இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவதுநினைத்துத் தங்களை வருத்திக் கொள்வார்கள்.
வாழ்க்கையினை வெறுத்து முதியோர் இல்லம், ஆன்மீக மடங்கள்,அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவரும், அதனைஆரம்பிப்பவரும் 8-ஆம் எண்காரர்களேயாகும். “எட்டாவது பெண்பிறந்தால் எட்டிப் பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர்” என்பதுபழமொழி. மக்களும் 8, 17, 26 ஆகிய தேதிகளைக் கண்டுதான்பயப்படுகிறார்கள். எந்த ஒரு நற்காரியத்தையும் தவிர்த்துவிடுகிறார்கள்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், &ம் எண்ணை விதிஎண்ணாக உடையவர்களும் 9-ம் எண்ணில் தங்களது பெயரைஉடையவர்களும், தங்களது வாழ்வில் பல தோல்விகளையும்,வேதனைகளையும், சில அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும்என்பதே 8-எண் கூறும் வாழ்க்கை நியதி!

8-ஆம் எண்ணில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள் (சனி வலிமை நல்லநிலையிலிருந்தாலும்) பெருத்த தனவான்களாகவும், பல்வேறுதொழில்களை உடையவர்களாகவும், நல்லவர்களாகவும்இருப்பார்கள்! தியாகிகளாகவும், அருளாளர்களாகவும், சிறந்தநீதிபதியாகவும், பேராசிரியர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர்அதிகாரிகளாகவும், கோடீஸ்வரார்களாகவும் இருப்பார்கள். ஆனால் 8ஆம் எண்ணில் பிறந்த மற்றவர்கள் தங்களது பிரச்சினைகளிலிருந்துவிடுபட முடியாமல் வாழ்க்கை முழுதும் தவிக்கின்றவர்களே.பெரும்பாலும் கொலை, களவு, கொள்ளை, கடத்தல், பொய்க்கையெழுத்து விபச்சாரம், குடி, சூது, வரசம், நம்பிக்கைத் துரோகம்போன்ற பல்வகை சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டுதவிக்கின்றார்கள்.

ஆனால் மேற்கொள்ள துர்ப்பலன்களைக் கண்டு வாசகர்களேபயப்படவேண்டாம்! 8 ம் எண்காரர்களும் அதிர்ஷ்டம் மிகுந்தவாழ்க்கை வாழ வேண்டுமெனில் தங்களது பெயரினை மிகவும்ஆராய்ந்து, நல்ல பெயர் ஒலியிலும், பெயர் எண்ணிலும் வைத்துக்கொண்டால், தங்களது கெட்ட விதியினைக்கூட மாற்றிவிட முடியும்!பல அன்பர்கள் பெயரை சீர்படுத்தி பலனடைந்துள்ளார்கள்.

எனவே கவலைப்படவேண்டாம். அது மட்டுமன்று பிரபல சினிமாநட்சத்திரங்களும், பெருத்த வியாபாரிகளும், மிராசுதார்களும்,அதிகாரிகளும், கோடீசுவரர்களும் 8-ம் எண்ணில்தான் பிறந்துள்ளனர்.சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், ஈ.வெ.ரா பெரியார்,ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஜே.ஆர்.டி. டாட்டா போன்றோரெல்லாம் இந்தஎண்ணில் பிறந்து, வெற்றிகரமாக வாழந்தவர்கள்தான். தெய்வநம்பிக்கை இவர்களிடம் தீவிரமாகவே உண்டு! ஒன்று கடவுளேஇல்லை! என்று வாதிடுவார்கள். அல்லது கடவுளே கதி! என்றுஇறைவனை நம்புவார்கள்.

தங்கள் நல்லதென்று நினைத்து, எடுத்துச்செய்கின்ற காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும்வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப் படாமல் செய்து முடிக்கும்வலிமை இவர்களுக்கு உண்டு. ஓரளவு பிடிவாத குணம்நிறைந்தவர்கள். இவர்கள் மேற்பார்வைக்குக் கடின மனமும்பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப் பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரித்து வாழ்க்கையளிக்கத்தயங்க மாட்டார்கள். பலாப்பழம் போன்ற குணமடையவர்கள்.

பொது சேவைக்கான முயற்சிகள், எடுத்துக் கொண்டிருப்பார்கள்.தங்களது வாழ்க்கையிலும், எப்போதும் உழைத்துக் கொண்டேதான்இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும்,உறவினர்களையும் திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு, மக்கள்சேவைக்கென ஓடிச் செல்பவர்கள் இவர்கள்தான்.

தனிமனித வாழ்ககையானாலும், சமுதா வாழ்க்கையானாலும் எட்டாம்எண்ணின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டால், பெரியசோதனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்றே எண்கணிதம்சொல்கிறது!
சாகதத்திலும், எந்த ஒரு கிரகமும் 8-ம் இடத்தில்(இராசிக் சக்கரம்)இருந்தாலும் (சனியைத் தவிர) அல்து கோசாரத்தில் 8-ம் இடத்திற்குவந்தாலும், அந்தச் சாதகர்கள், அந்தக் கிரகத்தின் காரணத்தால் பலதுன்பங்களை நிச்சயம் அடைவார்கள் என்று சோதிட சாத்திரம்கூறுகிறது!

8 ம் எண்காரர்கள் பெரும் தத்துவ ஞானிகளாகவும், மனிதர்களுக்குவாழ்க்கையில் வழிகாட்டியாகவும் விளங்குகிறார்கள்.

இவர்களது தொழில்
இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும் வெற்றிதரும். 8-ம் எண் வலிமை பெற்றால் பொறியாளர்களாகவும், 8-ம்எண்ணன் வலிமை குறைந்தால் டிப்ளமோ மற்றும் லேத் தொழில்கள்போன்ற வேலைகளில் ஈடுபடும் சாதாரணத் தொழிலாளிகளாகவும்இருப்பார்கள். லாரி, பஸ் போன்ற (சனியின் காரகத்துவ) தொழில்இவர்களுக்குப் பெருத்த அதிர்ஷ்டத்தைத் தரும். மில்கள் எண்ணெய்மில்கள், இரும்பு வியாபாரம் ஆகியவையும் நன்மை தரும். எண்ணெய்வியாபாரமும் நல்லது.
ஆன்மீக மடாதிபதிகள், கோவில் தர்மகர்த்தா, ஊர்மணியகாரர்போன்றவர்ளாகவும் புகழ் பெறுவார்கள்.

மேலும் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குயோகத்தைத் தரும். விவசாயம், கட்டிங்கள் கட்டுதல், லே&அவுட்போடுதல் இவர்களுக்கு ஒத்து வரும். பெரிய நிலக்கிழார்களும், பெரும்விவசாயிகளும் இவர்கள்தாம். உலகத்தை மறந்து உழைப்பதால்இவர்கள் ஆராய்ச்சித் தொழில்களில் (Research and Development)பல வெற்றிகள் பெறுவார்கள். பூகோளம், மற்றும் (Geology) நிலஆராய்ச்சிகளில் இவர்களது வாழ்க்கை அமையும்.

8-ம் எண்காரர்கள்மிகப் பெரிய பேச்சாளர்களாகவும், மதப்பிரசங்கிகளாகவும்விளங்குவார்கள். சுரங்கப் பொருட்கள் எடுத்தல், சுரங்கப் பொருள்கள்வியாபாரம் செய்தல் வெற்றி தரும். கிரனைட் கற்கள், கடப்பாக்கற்கள்வியாபாரம் போன்றவை வெற்றி தரும். கம்பளித் துணிகள்,ஆயுதங்கள், சோப்புக்கள், வியாபாரம் மற்றும் உற்பத்தித் தொழில்கள்நல்ல இலாபத்தைத் தரும். இவர்கள் அச்சகம் (Press), சோதிடம்,வைத்தியம் ஆகிய தொழில்களிலும் வெற்றியடையலாம். சிறைத்துறையும் (Jail Department) இவர்களுக்கு ஒத்தவரும்.

திருமண வாழ்க்கை
இவர்களது திருமண வாழ்வு பெருமையாகச் சொல்லப்படவில்லை!திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும். தங்களதுமனைவியுடன் கூட திறந்த மனதுடன் பழக மாட்டார்கள். சிலர் தனதுமனைவிகளை அலட்சியத்துடன் நடத்துவார்கள். மனைவி எதுசொன்னாலும் அதை மறுத்துப் பேசுவார்கள். இதேபோல் 8-ம் தேதிபிறந்த மங்கையரும், தங்கள் கணவருடன் அன்பின்றியே நடந்துகொள்வார்கள். தன் மனம்போல் வாழ நினைப்பார்கள். இங்ஙனம்உண்மையான அன்பின்றியே பெரும்பலானா எட்டாம் எண் நபர்கள்வாழ்கின்றார்கள்.

இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களைமணந்து கொள்ளலாம். 8-ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம்செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம்எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம்செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.
நண்பர்கள்
1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சிறந்தநண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 8-ம் தேதிபிறந்தவர்களாலும் இவர்கள் நன்மையடையலாம். 6, 5 தேதியில்பிறந்தவர்களாலும் நன்மை அடையலாம்!

இவர்களது நோய்கள்
இவர்கள் பிறந்த தேதிகள். குடல் பலகீனம் உடையவர்கள். சிறுவயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா,மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு! தலைவலி, கிறுகிறுப்புஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இரத்தத்தில்விஷச்சேர்க்கை எளிதில் ஏற்பட்டுவிடும். எனவே அடிக்கடி இரத்தப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது! வாதம் மூட்டுப்பிடிப்புகளால் பாதிப்புகள் அதிகம் உண்டு. ஈரல் அடிக்கடிபாதிக்கப்படும். காபி, டீ, மது போன்றவற்றில் நிதானம் தேவை.உணவில் எலுமிச்சம் பழம், அன்னாசி, வாழை, சிஸ்மிஸ்ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரைமிகவும் நல்லது!

சனி யந்திரம்& சனி & 33

12 7 14
13 11 9
8 15 10

சனி மந்திரம்

நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நவாமி சநைச்சரம்

எண் 8. சிறப்புப் பலன்கள்
மக்கள் அனைவரும் பயப்படும் 8ம் எண்ணின் சிறப்பு பலன் களைப்பற்றிப் பார்ப்போம். மக்களின் வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும்ஆதாரமாக விளங்குவது இந்த 8ம் எண்ணே! ஆனால் மக்கள் இந்த எண்ணை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்த எண் விதியின் எண்ணாக இருப்பதால், நாம் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளைஅனுசரித்து நல்ல பலன்களையோ அல்லது தீயபலன்களையோகொடுக்கிறது!

இவர்கள் எடுத்துக் கொள்ளும் எந்த செயலானாலும்அவற்றில் எதிர்ப்பும், முட்டுக்கட்டையும் உண்டு. ஆனால்எதிர்ப்பையும், தடைகளையும் பொருட்படுத்தாமல் காரியங்களில் ஈடுபடுவார்கள். வெற்றி பெறுவார்கள். இவர்கள் தங்களைப் போல்மற்ற பாதிக்கப்பட்ட மக்களிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள்.மனதில் இரக்க குணம் இருக்கும். இவர்களில் பெரும்பாலோர் பெரியசாதனைகளை, கடின உழைப்புடன் செய்து முடிப்பார்கள்.

இது விதியின் எண்ணாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலம்வரையிலும் வெற்றியோ அல்லது தோல்வியோ தொடர்ந்து வந்தகொண்டே இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல்,தங்களது கடமைகளை இவர்கள் தீவிர முனைப்புடன் செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுமக்களுக்கு உண்மையான நன்மை செய்வார்கள்.
8&ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் ஆதரவுபெரும்பாலும் கிடைக்காது.

இதனால் வெளியூர், அடுத்த இன மக்கள்,வெளிநாடு என அந்நியர்களிடமிருந்தே இவர்களுக்கு ஆதரவுகிடைக்கும். இவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்கள் வந்தால், பின்புதொடர்ந்து யோகம் வரப் போகிறது என்று பொருள். இதற்குக்காரணம் 8 என்பது இரண்டு பூஜ்யங்களால் உருவாக்கப்பட்டது.0+0=8. எனவே, முயற்சிகள் எல்லாம் பயன் அடைவதும், பூஜ்யமாவதும் அவர்களது விதிப்படியே அமைகிறது. விதி என்றவுடன்பயப்பட வேண்டாம். இன்று நாம் செய்யும் நல்ல செயல்கள், நாளைநல்ல விதியாக அமைகின்றன! அலட்சியத்துடன் புரியும் தீயசெயல்கள், நாளை நிச்சயம் கெட்ட விதியாக மாறி விடுகின்றன!எனவேதான் புறநானூறு கூறுகிறது.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
எனவே, நேர்மையான வழியில் உழைத்தால் வெற்றி மேல் வெற்றிஇவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆரம்ப காலம் முதலே மக்கள் 8&ம்எண்ணை விதியின் எண் என்று பயந்து வந்துள்ளார்கள். இது தனிமனிதன் வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்தஎண்ணின் ஒரு பக்கம் கடுமையான உழைப்பு, கருணை, ஏற்றம்,பெருத்த இராஜ யோகம் உண்டு. மறுபக்கம் புரட்சி, எழுச்சி,அராஜகம், ஒழுங்கின்மை போன்றவையும் உண்டு!

எல்லாம் விதிப்படியேதான் நடக்கிறது என்று இவர்கள்புலம்புவார்கள். பல நேரங்களில் வாழ்வில் விரக்தியும் ஏற்படும்.இருப்பினும் தங்களது வாழ்நாளிற்குள், இவர்கள் பெருத்த யோகத்தைஅனுபவித்தே செல்வார்கள். மனம் விரக்தியடையும் போதுதற்கொலை எண்ணங்கள் கூடச் சிலருக்குத் தோன்றும்.

இவர்கள் சிறந்த நீதிமான்கள், தெய்வத்திற்குப் பயந்தவர்கள். 8-ம்எண்ணானது ஒரு மனிதனைப் புடம் போட்டு, அவனைத் தங்கமாக்கிவிடும். இவர்களின் வாழ்க்கையில் எல்லா முக்யி நிகழ்ச்சிகளும் 8-ம்எண் வரும் நாட்களிலேயே நடைபெறும்! கிரேக்கர்கள் இந்த எண்ணை”நீதியின் கண்” என்று அழைத்தனர்.

தாங்கள் எண்ணியதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும் என்றதீவிர எண்ணம் உடையவர்கள். தாங்கள் நினைத்ததை அப்படியேவெளியில் சொல்ல மாட்டார்கள். தங்கள் வாழ்வின் பிற்பகுதியில்தான்பெரும்பாலோர் இன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்களுக்குத்தன்னம்பிக்கை குறைவு. எனவே, அதை அவசியம் வளர்த்துக்கொள்ளவேண்டும். தங்களை உலகத்தில் தனிமையாக இருப்பதாகஉணர்வார்கள். எனவே எளிதில் அடுத்தவர்களை நம்ப மாட்டார்கள்.இவர்களுக்குப் பெயர் எண் நன்றாக இருந்தால் மட்டுமே, கெட்டவிதியினை மாற்றிக் கொள்ள முடியும்.

அதில் கவன குறைவாகவோ,அலட்சியமாகவோ நடந்து கொள்ளும்போது, துன்பங்கள் தொடர்ந்துவரும். பிறர் படும் துன்பம் கண்டு சகிக்காத மனம் கொண்டவர்கள்.தங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், உதவிகிட்டும்இடத்தையாவது காட்டுவார்கள்.

8-ம் எண்ணின் ஆதிக்கம் குறைந்தோர் திருட்டு, வழிப்பறி, கொலை,விபச்சாரம் போன்ற வழிகளில் துணிந்து ஈடுபடுவார்கள். அதனால்நிச்சயம் தண்டனையும் (சிறை) அடைவார்கள். எந்தச் செயலையும்சற்று மெதுவாகவே செய்வார்கள். தரையைப் பார்த்தே நடப்பார்கள்.
எந்த ஒரு பிரச்சினைக்கும், நடுவராக இருந்து நீதி சொல்லச்சிறந்தவர்கள். தம்மிடம் நட்புக் கொண்டவர்களையும், பகைமைகொண்டவர்களையும், தமது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். உடல் உழைப்பில் இவர்களுக்கு நாட்டம் அதிகம். பெரும்பாலும்தனிமையாக இருப்பதையே விரும்புவார்கள்.

இவர்களது பேச்சில்விதி, வாழ்க்கை, தர்மம் என்று அடிக்கடி வார்த்தைகள் வரும்.இவர்களுக்குக் காதல் விவகாரங்கள் வெற்றி கொடுக்காது.திருமணமும் பொதுவாக அன்னியத்தில் (அடுத்த ஜாதி, மதம்,அந்நியநாடு) தான் நடக்கும். இவர்களது செல்வ நிலை ஏற்றமும்இறக்கமுமாக இருக்கும். எந்த முன்னேற்றம் வந்தாலும் அதைஅனுபவிக்க முடியாமல் பல சோதனைகள் கூடவே வந்துவிடும்.

சுதந்திரமான தொழிலைக் காட்டிலும், அடுத்தவர்களின் கீழ் வேலைசெய்வதையே விரும்புவார்கள். ஆனால் 8-ம் எண் வலிமைபெற்றவர்கள். பெரும் தொழில் அதிபர்களாகவும், கடல் கடந்துதொழில் செய்யும் வல்லுநர்களாகவும் இருப்பார்கள்! உடம்பிலோஅல்லது மனத்திலோ ஏதாவது ஒரு குறை அல்லது நோய் இருந்துகொண்டே இருக்கும்.

அதிர்ஷ்ட நாள் Lucky Dates

இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகியநாட்கள் மிகச் சிறந்தவை. 8-ம் எண்ணின் தீய குணங்களை 5-ம் எண்மட்டுமே போக்கும் வல்லமை படைத்தது. எனவே, 5, 14, 23 ஆகியநாட்களும் இவர்களுக்கு நன்மையே புரியும். எனவே கூட்டு எண் 1மற்றும் 5 வரும் நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை.
4, 13, 22, 31 நாட்களில் நல்லவை தாமாகவே நடக்கும். ஆனால் புதியமுயற்சிகளில் இவர்கள் அந்த நாட்களில் தேடிச் செல்லக்கூடாது! 9-ம்எண்ணும் நல்ல பலன்களையே செய்யும்.
ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய நாட்களும், 2, 11, 20, 29நாட்களும் கெட்ட பலன்களையே கொடுக்கும். கூட்டு எண் 8 மற்றும் 2வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட இரத்தினம் Lucky Gems

இவர்களுக்கு நீலம் (Blue Sapphire) என்னும் இரத்தினக் கல்லேமிகவும் அதிர்ஷ்டமானது! ளிறிகிலி (மரக்கல்) என்ற இரத்தினக்கல்லையும் உபயோகிக்கலாம். மேலும லெபராடோரிட்(LABRADORIATE) லாஜர்த் (LAPIS LAZULLI) என்னும் கற்களையும்உபயோகப்படுத்தலாம்.

அதிர்ஷ் நிறங்கள் Lucky Colours
இவர்களுக்கு மஞ்சள் நிறமே சிறந்தது. ஆழ்ந்த பச்சை, நீலம்ஆகியவை நன்மை தரும். மற்றவர்களை சந்திக்கச் செல்லும்பபோதுஎப்போதும் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகள் சிறந்தவை.
கருப்பு, பாக்குக்கலர் மற்றும் கரும்சிவப்பு ஆகிய நிறங்களைத் தவிர்க்கவேண்டும்.
8 ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியானவாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள்பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனைவளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத்தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூகசேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள்.பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர் களைக் கைதூக்கி விடும்நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள்.

17 ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல்உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகுவாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்தசாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும்உண்டு.

ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள்வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால்பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம்சேர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும்அடையும். இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்குமாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி,அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும்,சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள்.

26 ஆம் தேதி பிறந்தவர்கள்

பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர்சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம்உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம்அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும்உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி/தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள்இவர்கள்தான். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள்.கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால்அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள்.

இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும்கிடைத்து விடும். இவர்கள் மக்கள் அனைவரையும் எந்தவித்தியாசமின்றிச் சமமாக நேசிப்பார்கள் காதல் விவகாரங்களில்சிக்கல்கள் ஏற்படும்.

எண் 8க்கான் (Saturn) தொழில்கள்
இவர்கள் கடின உழைப்பாளிகள். சனி ஆதிக்கம் குறைந்தவர்கள்கூலியாகவும், Technicianீ களாகவும் இருப்பார்கள்.
கடலை, எள்ளு, கம்பு, மலை வாழை, புகையிலை, மூங்கில், கீரைவகைகள், மரம், விறகு, கரி, எண்ணெய் வியாபாரம், உதிரிபாகங்கள்(Spares) விற்பனையும் நன்கு அமையும். ஆடு, மாடு, கோழிபோன்றவற்றை அறுக்கும் தொழில்கள், பட்டிட வேலை மேஸ்திரி,தபால் துறை, துப்பறியும் துறை (Detective) துப்புரவுத் துறை(Sanitary)யிலும் நன்கு பிரகாசிக்கலாம். அச்சுத் தொழில், பைண்டிங்போன்றவையும் நன்கு அமையும்.

பலர் பொறுமைசாலிகள், ஆராய்ச்சியாளர்கள், கணிதம் பூகோளம்,நில ஆராய்ச்சி (Mining), தத்துவம், பௌதிகம் (Chemsitry), இரும்புத்தொழில்கள் போன்றவையும் நன்கு அமையும். பிராணிகள் வளர்ப்பு,வைத்திய தொழிலம் பார்க்கலாம். விவசாய முதலாளிகளும்(Landlord), தொழிலாளிகளும் (Labourers) இவர்களே.

பலர் பெரியதொழிலதிபதிகளாகவும் வெற்றி பெறுவார்கள்.
போக்குவரத்து தொழில்கள் (Mechanic. Drivers etc) மூலம் நன்குசம்பாதிக்க முடியும். லாரி, பஸ்கள் நடத்துதல் மூலம் நன்கு பணம்சேர்க்க முடியும். டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களாகவும் பணிபுரிவார்கள். வெளி நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு பலருக்கும்கிடைக்கும்.

இரும்புச் சுரங்கம், நிலத்தடியில் இருக்கும் கற்கள் சுரங்கத் தொழில்போன்றவையும் ஒத்து வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலும் வெற்றிதரும். கட்டிட வேலைகள், இன்சினியரிங் பணிகள் இவர்களுக்குப்பிடித்தமானவை! கடுமையான உழைப்பை எதிர்பார்க்கும்தொழில்கள், கருவிகளை இயக்குபவர்கள் (Heavy M/C Operators)போன்றவையும் இவர்களுக்கு நன்கு அமையும்.
உழவுத் தொழிலும், எண்ணெய், இரும்புகள், லாரி வியாபாரங்கள்,உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையும் இவர்களுக்கு உரியதொழில்கள்.
சிறைச்சாலைத் துறை, மக்கள் நிர்வாகத்துறை, தோல், செருப்பு(Leather) விற்பனையும் இவர்களுக்கு நன்கு அமையும். நிலஅளவையும், விவசாயமும் இவர்களுக்கு ஒத்து வரும். எண்ணின்ஆதிக்கம் குறைந்தவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் இவர்களுக்கு ஒத்துவரும்.

நவக்கிரக மந்திரங்கள் – சனி

சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனிஅந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும்வழிபடவேண்டும்.

தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்கவேண்டும்.

அனுமன் சாலிசா என்ற தலைப்பை (பார்க்கவும்) படிக்கவும்.

சனி மூல மந்திர ஜபம்:
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”,
48 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

சனி ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்,
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

தொண்டு: சனிக்கிழமையன்று நன்கொடையாக

ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: சனிக்கிழமை. தோறும் பெருமாளை வழிபட வேண்டும். வியாழன் தோறும் அனுமானை வலம் வரவேண்டும்.

பூஜை: அனுமான் பூஜை.

ருத்ராட்சம்: 14 அல்லது ஓரு முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

சனி காயத்ரி மந்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின்,30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனிதொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்ததீர்வாக உள்ளது.

சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.

சனி பகவான் கீர்தனைகளை யதுகுலகாம்போதி ராகத்தில்

சனி பகவான் கீர்த்தனம் – பல்லவி
திவாகர தநுஜம் ஸனைச்சரம் தீரதரம் ஸந்தகம் சிந்த்யேஹம்

அனு பல்லவி
பவாம்பு நிதௌ நிமக்ன ஜநாநாம் பயங்கரம் அதி க்ரூர பலதம்
பவானீஸகடாக்ஷ பாத்ர பூத பக்திமதாம்
அதிஸயஸூப பலதம்

சரணம்
காலாஞ்ஜந காந்தியுக்த தேஹம் கால்சஹோதரம்
காக வாஹநம் நீலாம் ஸூக புஷ்பமாலா வ்ருதம்
நீலரத்ந பூஷண அலங்க்ருதம்
மாலிநீ வினுத குருகுஹ முகிதம் மகர கும்ப ராஸீ
நாதம் திலதைல மிஸ்ரிதான்ன தீபப்ரியம்

தயா ஸூதா ஸாகரம் நிர்பயம்
கால தண்ட பரிபீடி ஜாநும் காமிகார்த்த
பலத காம தேநும் கால சக்ர பேத சித்ரபாநும் கல்பித
சாயா தேவீ ஸூநும் ( திவ)

சூர்யனின் புத்திரரை, மிக தைரியமானவரை, சம்சாரக் கடலில்மூழ்கியவருக்கு பயங்கரமானவரை, கடும் பலங்களை தருபவரை, சிவபெருமானது அருளுக்கு பாத்திரமானவரை, தன்னை தொழும்பக்தருக்கு மிக அதிகமாய் சுப பலங்கள் அளிப்பவரை, கரும்காக்கையை வாஹனமாய் கொண்டவரை, கறுப்பு வஸ்திரம்,மலர்களால் அலங்கரிப்பட்டவரை, மகர, கும்ப ராசிகளின் அதிபதியை,எள்ளு அன்னத்திலும், நல்லெண்ணெய் தீபத்திலும் பிரியம்கொண்டவரை, கருணை கடலானவரை, பயமற்றவரை, யமதண்டத்தினால் வருந்தும் முழங்காலை கொண்டவரை, சூர்ய, சாயாதேவி மைந்தரை சனீஸ்வர பகவானை துதிப்போம்.

சனி தோஷ பரிகாரங்கள்
ஆஞ்சநேய வழிபாடும் சிறந்தது. அனுமனுக்கு துளசி மாலையும், வடைமாலையும் அணிவித்து 27 முறை வலம் வரலாம். விநாயகர் வழிபாடும்நல்ல பயன் தரும். விநாயகரும், அனுமனும் மட்டுமே சனிக்குஆட்படாதவர்கள். சனிக் கிழமைகள் தோறும் சுந்தர காண்டம்பாராயணம் செய்யலாம். காக்கைகளுக்கு தினம் தோறும்உணவளிக்கலாம். தோல் அகற்றாத கருப்பு உளுந்து தானம்செய்யலாம். காலையிலும், மாலையிலும் பஞ்சாட்சரம், சுதர்ஷனஅஷ்டகம், அனுமன் கவசம், சனி கவசம் படிக்கலாம்.
சனி பகவானால் இன்னல்கள் அதிகமாகும் பொழுது கருப்பு முழுஉளுந்தை 108 என்ற எண்ணிக்கையில் சிறு பொட்டலமாக கட்டிதலைக்கு அடியில் வைத்து உறங்கி, எழுந்த பின்னர், நீராடி சனிபகவானை 108 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொறு சுற்றுக்கும்ஒரு உளுந்தை ஓரிடத்தில் இட வேண்டும். சனி பகபான் சந்நதியில்கருப்பு உளுந்தை தானமாக கொடுப்பதும், ஜீவராசிகளுக்குஉணவிடுவதும் மிகச் சிறந்த பலன் தரும்.
சிவ பெருமானை வழிபடும் ” தாரித்ரிய தகன ஸ்தோத்திரத்தை “சிவனின் முன்பாகவோ அல்லது தட்சிணாமூர்த்தியின் முன்பாகவோபாராயணம் செய்யலாம். புத்திர தோஷம் தீர ” புத்திர ப்ராப்திஸ்தோத்திரம்

சனீஸ்வர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்

ராசி கும்பம், மகரம்

திக்கு மேற்கு
அதி தேவதை யமன்
ப்ரத்யதி தேவதை பிரஜாபதி
தலம் திருநள்ளாறு
வாகனம் காகம்
நிறம் கருப்பு
உலோகம் இரும்பு
தானியம் எள்
மலர் கருங்குவளை
வஸ்திரம் கருப்பு நிற ஆடைகள்
ரத்தினம் நீல மணி
நைவேத்யம் எள்ளுப் பொடி ச
மித்து வன்னி சமித்து

சனி தோஷ பரிகாரங்கள்

சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, நல்லெண்ணெய் கொண்டுஇரு விளக்குகளை சனி பகவான் சந்நதியில் ஏற்றி வைத்து, எள் சாதம்நைவேத்யம் வைத்து மனமுருகி சனி பகவானை வழிபட வேண்டும்.சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர், எனவே சனி கவசம் சொல்வதுசிறந்த பலன் அளிக்கும். திருநள்ளாரு சென்று கருப்பு வஸ்திரம்அணிந்து நள தீர்த்ததில் நீராடி, வஸ்த்திரத்தை அங்கேயேவிட்டுவிட்டு, வேறு உடை அணிந்து, தர்பாரண்யேஸ்வரரையும்,அம்பாளையும், சனி பகவானையும் வழிபட வேண்டும். கருப்புவஸ்திரங்களை ஏழைகளுக்கு தானம் தரலாம். பசுவின் பால் கொண்டுசனிக் கிழமை தோறும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம். சிவபெருமானுக்கு விளக்கேற்றி, வில்வத்தால் அர்ச்சனை செய்யலாம்.பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பு. எள் கலந்த சாதத்தை சனி தோறும்ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.

எண் :- 8

எண்ணுக்குறிய கிரஹம் :- சனி

அதிர்ஷ்ட தேதிகள் :- 1,10,19, 28, 4,13, 22, 31, 9,18, 27

அதிர்ஷ்ட கிழமை :- சனி, ஞாயிறு, திங்கள்

அதிர்ஷ்ட மாதம் :- ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜுலை,அக்டோபர், நவம்பர்

அதிர்ஷ்ட ரத்தினம் :- நீலம்

அதிஷ்ட திசை :- தெற்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட நிறம் :- மஞ்சள், நீலம், கருப்பு

அதிர்ஷ்ட தெய்வங்கள் :- சுதர்ஸனர், கருப்பசாமி, நரசிம்மர்

அதிர்ஷ்ட மலர்கள் :- கருங்குவளை, நீல நிற மலர்கள்

அதிர்ஷ்ட தூப, தீபம் :- கருங்காலி தூபம், குங்குலியம்

அதிர்ஷ்ட சின்னங்கள் :- காகம், லிங்கம், ருத்திராட்சம், நந்தி.சக்கரம், சிறுத்தை

அதிர்ஷ்ட மூலிகைகள் :- யாணை வணங்கி, தகரை மூலிகை

அதிர்ஷ்ட யந்திரங்கள் :- பைரவர் யந்திரம். சிவசக்தி அல்லதுசிதம்பர யந்திரம்

அதிர்ஷ்ட எண் :- 1, 4, 9

ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை :- 8

ஆகாத தேதிகள் :- 8, 17, 26 இருப்பினும் தெய்வீகவேலைகள் செய்யலாம், சுபம் உண்டாகும்.

No comments:

Post a Comment