Friday 29 January 2016

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை :

* காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும்.

* மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

* மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

* காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும்.

* கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.

* விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

* விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது.

* வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது.

* சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.

* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

* விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.

* விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.

* விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.

* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.

No comments:

Post a Comment