Saturday, 14 November 2015

துளசி

துளசி

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க நீங்க மரத்தை நட வேண்டாம் , இந்த துளசியையாவது நடுங்க !!! துளசி அதைப் பாதுகாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள் இன்று. சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும் என்று சமீப காலங்களில் வ்லியுறுத்தப்பட்டு வருகிறது.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.
ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற் போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 500 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் அல்லது 720 கோடி மூங்கில் மரங்கள் அல்லது 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை என்கின்றனர் அறிஞர்கள். மேலும் ஒரு கணக்குச் சொல்கிறது வீட்டுக்கு 15 துளசி செடிகளை வளர்த்து பராமரித்து வந்தால் கூட அந்தப் பகுதியின் சுற்றுசுழலில் நேர்மறையான விளவுகள் நிறையவே உண்டாகும் என்று.

நமது முன்னோர்கள் வீட்டுத் தோட்டத்தில் துளசி செடிகளை வளர்த்ததும் வீட்டு முன் வாசலிலோ பின் வாசலிலோ துளசி மாடம் அமைக்கும் பழக்கத்தை உண்டாகியிருந்ததும் ஏன் என்பது இபோது தான் விளங்குகிறது.

No comments:

Post a Comment