Saturday 21 November 2015

ஆழ் மனதை திறக்கும் சாவி மனம்

ஆழ் மனதை திறக்கும் சாவி
மனம்:

   மனம் என்பது என்ன?மனம் எண்ணங்களை கொண்டது.ஒரு மனிதனின் அறிவு என்பது அவன் வாழ்வில் ஏற்படுகின்ற அனுபவம்.நெருப்பு சுடும் என்று ஒரு அனுபவம் ஏற்படுகிறது.அந்த அறிவு நம் மனதில் பதிகிறது (Register).மறுமுறை நெருப்பை பார்த்ததும் சுடும் என்ற அறிவு நினைவிற்கு வருகிறது.நாம் பிறந்ததில் இருந்து இப்போது வரை நமது மூளைக்குள் போடப்பட்ட பல விஷயங்களை பொறுத்தே நமது சிந்தனை அமைகிறது.ஒரு மனிதனின் சிந்தனை அவனுக்கு கிடைக்கும் செய்திகள் (Data/Information) பொறுத்தே அமைகிறது.

மூளை: 

    நமது மூளை வலது பக்கம்,இடது பக்கம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. தகவல் சேகரிப்பது,பகுத்தறியும் சிந்தனை,கணக்கு,மொழி,திசை,பயம் இவை வலது பக்க மூளையின் செயல்பாடு.உள்ளுணர்வு,புரிந்து கொள்ளுதல், சிந்தனை,உணர்ச்சிகள் இவை வலது பக்க மூளையின் செயல்பாடுகள்.இடதுபக்க மூளையின் செயல்பாடு முழுவதும் வெளியில் இருந்து நமக்கு கிடைக்கும் விஷயங்களை பொறுத்தது.வலதுபக்க மூளையின் செயல்பாடு முழுவதும் நமக்குள் இருந்து வரும் விஷயங்களை பொறுத்தது.

மனதின் நிலைகள்:

   மூளையிலிருந்து மெல்லிய மின் வீச்சுகள் வெளிபடுகின்றன.இதை Electroelectroencephalogram (EEG) என்ற கருவி மூலம் அளவிட முடியும்.இந்த மின் வீச்சுக்களின் வேகம் அவ்வபொழுது நமது மூளையின் செயல்பாட்டை பொருத்து மாறக்கூடியது.இது வினாடிக்கு இத்தனை Cycles என்று கணக்கிடப்படுகிறது.கீழ் கண்டவாறு நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது.

1.பீட்டா நிலை
2.ஆல்ஃபா நிலை
3.தீட்டா நிலை
4.டெல்டா நிலை

1.பீட்டா நிலை:

->வினாடிக்கு 14 சைக்கிள்களுக்கு மேல்.
  
->நாம் விழித்திருக்கும் நேரத்தில் மூளையின் செயல்பாடு பீட்டா அளவில் இருக்கும்.

2.ஆல்ஃபா நிலை
 
->வினாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் வரை.
  
->தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை.

3.தீட்டா நிலை

->வினாடிக்கு 4 முதல் 7 சைக்கிள் வரை.
   
->நாம் ஆழ்ந்த நித்திரையிலிருக்கும் நிலை.

4.டெல்டா நிலை

   
->வினாடிக்கு 0 முதல் 4 சைக்கிள் வரை.
   
->மிகவும் ஆழமான நிலை.

மனச்சங்கிலி:

நாம் அனைவரும் கோவிலில் யானையை பார்த்திருப்போம்.அதன் காலில் ஒரு சங்கலி கட்டபட்டிருக்கும்.பாகன் கையில் ஒரு கம்பை வைத்து குத்தி அடக்கி வைத்திருப்பான்.யானை மனிதனை விட பல மடங்கு பலம் வாய்ந்தது.ஆனால் சிறிய பாகனுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கிறது.அவன் சொன்னால் ஆசீர்வாதம் கொடுக்கிறது,காசு வாங்குகிறது.உண்மையில் யானையை கட்டுபடுத்துவது அதன் ஆழ் மனதில் பதிந்த எண்ணம்.யானை சிறுவயதில் இருக்கும் போதே பாகன் சங்கிலியால் கட்டி வைத்து கட்டுபடுத்துகிரான்.யானை சங்கிலியை உடைக்க முயன்று முடியாமல் முயற்சிஐ கைவிட்டிற்கும்.இப்போது அது வளர்ந்து பெரிய யானையாக இருக்கும்.ஆனால் அது சங்கிலியை உடைக்க இப்போது முயற்சி செய்யாது.நீங்கள் உற்று நோக்கினால் அவ்வப்பொழுது தன் கால்களை அசைக்கும் யானை சங்கிலி கட்டிருக்கும் காலை அசைப்பது இல்லை.சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் யானையின் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது.அதனால் தான் கட்டுப்பட்டு நிற்கிறது.

யானைய போல நம்மில் பலபேர் நிறைய மன சங்கிலிகளை கட்டிகொண்டிருக்கிறோம்.உதாரணத்திற்கு எனக்கு கணக்கு வராது,அது ரொம்ப கஷ்டம்,அது என்னால் செய்ய முடியாது முதலியன.இந்த சங்கிலிகளை நாம் உடைத்து எரிய வேண்டும்.தியானம் பழகினால் இந்த சங்கிலிகளை உடைத்து எரிந்து விடலாம்.நாம் தியானம் செய்யும் போது என்னகளின் வேகம் குறைந்து மனம் பீட்டா நிலையில் இருந்து அல்ஃபா நிலைக்கு வருகிறது.நமது ஆழ்மனம் திறக்கபடுகிறது.இந்த அல்ஃபா நிலைதான் முன்னோர்கள் கூறும் துரிய நிலை ஆகும்.தியானம் ஆழ் மனதை திறக்கும் அற்புத சாவி.    

"ஆனாபானசதி தியானம்"

"ஆனாபானசதி" இது ‘கெளதம புத்தர்’ 2500 வருடங்களுக்கு முன் பயின்று வந்த தியான முறையாகும். இந்த தியானத்தை இடைவிடாமல் மேற்கோண்ட பின்புதான் "சித்தார்த்தர்" என்னும் மனிதர், 'கெளதம புத்தர்' என்னும் 'மகான்' ஆனார். பாலி மொழியில்
                   
'ஆனா' என்றால் 'உள் இழுக்கும் மூச்சு'
                     
'அபான' என்றால் 'வெளிவரும் மூச்சு'

'சதி' என்றால் ஒன்றியிருப்பது.

ஆக "ஆனாபானசதி" என்றால், 'நம் சுவாசத்தோடு நாம் ஒன்றியிருப்பது என்று பொருள். இதனையே, "சுவாசத்தின் மீது கவனம்" என்றும் சொல்லலாம். "ஆனாபானசதி" தியானம் உலக மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
தியானம் என்றால் நம் சுவாசத்தின் மீது நமது முழுகவனத்தை வைத்திருப்பதாகும். அவ்வாறு மூச்சை கவனித்துக் கொண்டிருந்தால், நமது மனம் எந்த சிந்தனையுமின்றி, சாந்த நிலையை அடையும்.
மனம் அந்த நிலையை அடையும் போது, அளவற்ற விஸ்வசக்தி நமது உடலில் பாய்கிறது. விஸ்வசக்தி நமது நாடிமண்டலத்தை சுத்தகரித்து, நமது மூன்றாம் கண்ணை இயக்குகின்றது. இந்த விஸ்வசக்தியின் மூலமாக நல்ல உடல் ஆரோக்கயமும், அமைதியான மனநிலையையும் மற்றும் பல ஆன்மிக அனுபவங்களையும் பெறுவோம்.

தியானம் செய்யும் முறை
   
தியானம் செய்வதற்கு, சுகமான ஆசனத்தில் அமர வேண்டும். தரையில், பாய் மீதோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளவும். பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக் கொள்ளவும். இரு கை விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்துக்கொள்ளவும். உடல் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தியபடி இயல்பாக இருக்க வேண்டும். பின்பு கண்ணாடி இருந்தால் கழற்றி விட்டு, கண்களை மெதுவாக மூடிக்கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். எந்த மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டாம். கடவுள் மற்றும் மகான்களின் உருவத்தை நினைக்கக் கூடாது. மனதில் எண்ணங்கள் எழும்போது, அவற்றைவிட்டு, முழு கவனத்தையும் சுவாசத்தின் மீது செலுத்தவும்.

தியானம் செய்யும் நேரம்

தினமும் குறைந்தபட்சமாக, அவரவரது வயதிற்கு நிகரான நேரம் தியானம் செய்ய வேண்டும். உதாரணமாக, 10 வயது சிறுமி 10 நிமிடங்களும், 60 வயதுடையவர் தொடர்ந்து 60 நிமிடங்களும் தினமும் தவறாமல் தியானம் செய்ய வேண்டும்.

"தியானத்தின் பலன்கள்"

1) வியாதிகளிலிருந்து நிவாரணம்
2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.
3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்
4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்
5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.
6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.
7) ஞாபக சக்தி அதிகரிப்பு.
8) இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல்.
9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.
10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
11) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.
12) முன் ஜன்மங்களை தியானத்தில் கண்டறிதல்.
13) எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்.

மாணவ, மாணவியருக்கு:

1) உடல் ஆரோக்கியம் அடையும்.
2) தேவையற்ற பழக்கங்கள் மடிந்து மறையும்.
3) பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.
4) ஞாபக சக்தி வளரும்.
5) எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.
6) உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும்.
7) பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும்.
8) உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.
9) மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.
10) நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.
11) அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது.
12) சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.
13) தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும்.

கர்ப்பினிப் பெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம்
1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.
2) மன வலிமை, மன அமைதி ஏற்படும்.
3) பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.
4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.
5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.

பிரமிட் தியானம்

பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள் அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட் தியான'மாகும். பிரமிடினுள் அமர்ந்து செய்யும் தியானத்தில் சாந்தமான மனநிலையிலிருந்து, மிக உன்னதமான நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத் திறனையும் பலர் பெற்றுள்ளனர்.

பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல் செய்யும் தியானத்தில் பெறும் ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.

பிரமிட் தியானத்தில் தேவையற்ற உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல் முழுவதும் ஒரு ஒய்வு நிலையை அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான உணர்வு நிலையைத் தருவதாகப் பலர் கூறுகின்றனர்.
தியானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிக அதிகமன ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட் உருவாக்குகின்றது. மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க, பிரமிட் உதவுகின்றது.

No comments:

Post a Comment