Thursday 19 November 2015

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும்

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும் :

வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் உழைத்துக்கொண்டு இருக்கிறான். மலையளவு நாம் உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறது ஒரு முதுமொழி, அப்படி அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது ஒவ்வொரு ராசியினருக்குமான  யந்திரமும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் ஆகும். இந்த எந்திரங்களை உரிய தகட்டில் எழுதி ஒரு இலட்சம் மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்துகொள்ள சகல காரியங்களும் வெற்றியடையும்.

கீழே வாழ்வில் வெற்றி அடைய எந்திரங்களும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் 12 ராசிகளுக்கும் தரப்பட்டுள்ளது.

1.மேஷம் : வாழ்வில் வெற்றி அடைய

பால ஷண்முகா எந்திரம்

வைகுண்ட மூலிகை

மேஷம் இராசியில் பிறந்தவர்கள் பால ஷண்முகா எந்திரம் எழுதி வைகுண்ட மூலிகை என்னும் தும்பை செடிக்கு ஞாயற்று கிழமையும் அஷ்டமியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

2. ரிஷபம் : வாழ்வில் வெற்றி அடைய

மஹா லக்ஷ்மி எந்திரம்

அம்மன் பச்சரிசி

ரிஷப  இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி  எந்திரம் எழுதி அம்மன் பச்சரிசி  மூலிகை  செடிக்கு வளர்பிறை செவ்வாய் கிழமை குரு ஹோரையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

3.மிதுனம் : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம்

அற்ற இலை ஒட்டி

மிதுன  இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம்
எழுதி அற்ற இலை ஒட்டி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

4.கடகம் : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்தரம்

சிவப்பு நத்தைச்சூரி

கடக  இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ துர்காபரமேஸ்வரி எந்திரம்  எழுதி சிவப்பு நத்தைச்சூரி  மூலிகை  செடிக்கு தேய்பிறை புதன்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

5.சிம்மம் : வாழ்வில் வெற்றி அடைய

சிதம்பர சக்கர எந்திரம்

வெள்ளை விஷ்ணு கிராந்தி

சிம்ம இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சிதம்பர சக்கர எந்திரம்  எழுதி வெள்ளை விஷ்ணு கிராந்தி  மூலிகை  செடிக்கு வளர்பிறை ஞாயற்றுக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

6.கன்னி : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ சுதர்ஷன எந்திரம்

கருந்துளசி

கன்னி இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சுதர்சனசக்கர எந்திரம்  எழுதி வெள்ளை கருந்துளசி மூலிகை  செடிக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

7.துலாம் : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ சூலினி எந்த்ரம்

செந்நாயுருவி

துலாம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சூலினி எந்திரம்
எழுதி செந்நாயுருவி மூலிகை  செடிக்கு வளர்பிறை செவ்வாய்க்கிழமை நாளில் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

8.விருச்சிகம் : வாழ்வில் வெற்றி அடைய

பால ஷண்முக சடாச்சர எந்தரம்

தலைச்சுருளி

விருச்சிகம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ பால ஷண்முக சடாச்சர எந்திரம் எழுதி தலைச்சுருளி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமைநாளில் பூரட்டாதி நட்சத்திரமுமகூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

9.தனுசு : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்த்ரம்

சிவனார் மூலி

தனுசு இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  தனாகர்ஷன குபேர எந்திரம்  எழுதி சிவனார் மூலி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் ஏகாதசி திதியும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

10.மகரம் : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ கால பைரவ எந்த்ரம்

யானை வணங்கி

மகரம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  கால பைரவ எந்திரம்  எழுதி யானை வணங்கி மூலிகை  செடிக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

11.கும்பம் : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ கணபதி எந்த்ரம்

தகரை

கும்பம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  கணபதி எந்திரம்
எழுதி தகரை மூலிகை  செடிக்கு வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி  நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

12.மீனம் : வாழ்வில் வெற்றி அடைய

ஸ்ரீ தனாகர்ஷண குபேர எந்த்ரம்

குப்பை மேனி

மீன இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  தனாகர்ஷண குபேரஎந்திரம்
எழுதி குப்பை மேனி மூலிகை  செடிக்கு சூரிய கிரகண நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

No comments:

Post a Comment