Monday 23 November 2015

கோபம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய திருத்தலம்

கோபம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய திருத்தலம்

ஒருவரின் வாக்குஸ்தானத்தில் இருக்கின்ற நச்சுக்கிரகங்கள் அதாவது மேஷ ராசி, மற்றும் லக்னத்தைச் சார்ந்தவர்கள், சிம்மராசி மற்றும் லக்னத்தைச் சார்ந்தவர்கள், விருச்சிகராசி மற்றும் லக்னத்தைச் சார்ந்தவர்கள் இயற்கையாகவே கோபிகளாக இருப்பார்கள்.

வாக்குஸ்தானத்தில் ராகு-கேது, செவ்வாய், சனி ஆகியன இருந்தால் கோபம் உண்டாகும். அதனால் அவர்கள் அனைத்தையும் இழப்பார்கள்.

இவர்களுக்குண்டான பரிகாரத்தலம்"திருநெள்ளிக்காவல்". இத்திருத்தலம் திருவாரூரில் உள்ளது. வணங்க வேண்டிய தெய்வம் திருநெள்ளிகேஸ்வரர். இத்தலம் சூரியன், பிரம்மன், திருமால், சந்திரன், சனிபகவான், கந்தர்வர், துர்வாசர்,ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.

கோபத்திற்கு பெயர்பெற்றவர் துர்வாசர், இவரின் கோபம் இத்தலத்திற்கு வந்து குறைந்த காரணத்தால், இங்கு சென்று வணங்குபவர்களின் கோபமும் குறையும்.

ஒரு மனிதனுக்கு கட்டுப்பட்ட நியாயமான கோபங்கள் வரலாம், ஆனால் அளவிற்கு மீறிய கோபத்தால் ஒரு மனிதன் தானும் அழிந்து பிறரையும் அழித்து விடுவான்.

எனவே இந்தத்திருத்தலமான திருநெள்ளிக் காவலில் சென்று இறைவனை வணங்கி நற்பலன்களைப் பெற வேண்டுமென்றும்.

No comments:

Post a Comment