Thursday 19 November 2015

வசிய திலகம் - செய்முறை

வசிய திலகம் - செய்முறை :

வசிய திலகம் செய்ய ஏரழிஞ்சல் விதையை கற்பூரம் சேர்த்து அரைத்து பீங்கான் ஜாடியில் போட்டு சூரிய ஒளியில் வைத்தால்  அதிலிருந்து தைலம் இறங்கும் (வசிய திலகம்) அதை எடுத்து தாமிர டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்து கொள்ளவும்.

பின் ஞாயற்றுக்கிழமை அன்று  ஒரு பலகையின்  மீது சிவப்பு பட்டு துணி விரித்து அதன் மேல் வசிய திலகம் உள்ள தாமிர டப்பாவை வைத்து காரம்பசு (கருப்பு நிற பசு) நெய்யில் தாமரை நூல் திரிபேட்டு தீபம் ஏற்றி கிழக்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு

"ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும் உவ்வும் வசிய வசிய சுவாஹா"

என்ற வசிய  மந்திரத்தை 1008 ஜெபம் செய்து, "யநமசிவ" என்ற மந்திரம் 1008 உரு சொல்ல மேற்படி தைலம் (வசிய திலகம்) வசியமாகும்.  அதன்பின் வசிய திலகம் இட்டு செல்ல சகல விதமான காரியங்களும் கைகூடும்.

No comments:

Post a Comment