Monday 23 November 2015

நாட்டிய கலைகளிலே சிறந்து விளங்க வணங்க வேண்டிய திருத்தலம்

நாட்டிய கலைகளிலே சிறந்து விளங்க வணங்க வேண்டிய திருத்தலம்
ஒரு மனிதனுக்கு சந்திரனும், சுக்கிரனும் ஜாதகத்தில் இருந்து எண்ணங்களை நிறைவேற்றுகின்றது.
நாட்டியக் கலைஞர்களுக்கும் , நாட்டியம் கற்றுக் கொடுப்பவர்களுக்கும் நாட்டியக் கலை சிறப்பாக இருப்பதற்கு"திருக்கூடலைஅற்றார்வூர்" எனும் தலத்திற்கு சென்று வணங்க வேண்டும் .
சிதம்பரம்- காவல்குடி வழியில் இத்தலம் உள்ளது. இறைவன்- நர்த்தனவல்ல ஈஸ்வரர், இறைவி- பராசக்தி, ஞானசக்தி, தீர்த்தம் - வெள்ளாறும், மணிமுத்தாறு கூடும் இடம்
பிரம்மனுக்கு நர்த்தனமாடிய வல்லபேஸ்வரரின் திருத்தலமாக இத்தலமிருப்பதால், நடனகலைஞர்கள் இவரை வணங்கினால் நல்ல முறையில் நடனமாடுவார்கள். ஆயகலையில் ஒன்றான நடனக்கலை ஒருவர் ஜாதகத்தின் 10-வது இடத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். சுக்கிரனும், சந்திரனும் வலுபெற நடனத்தில் நன்கு தேர்ச்சி பெறுகின்றார்கள்.
எனவே, நாட்டியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று இத்தல இறைவனை வணங்க வேண்டும்

No comments:

Post a Comment