Sunday, 15 November 2015

எந்த தெய்வத்திற்கு என்ன மலர் ?

எந்த தெய்வத்திற்கு என்ன மலர் ?

ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும்போதும் பூஜை செய்யும் போதும் நாம் பயன்படுத்தும் மலர்கள் வித்தியாசப்படும்.
எந்த தெய்வங்களுக்கு என்னென்ன மலர்கள் உகந்தவை மற்றும் எந்த மலர்கள் பூஜையில் விலக்கப்பட வேண்டியவை ?

பூஜைக்கு உகந்த மலர்கள் :

விநாயகர் - அறுகு, சண்பகம், பாதிரி, சூரியகாந்தி, வன்னி,
சிவன் - கொன்றை, வில்வம், தும்பைபூ, சங்குபூ, செம்பருத்தி
விஷ்ணு - துளசி, மாதவி, குருந்து, வாகை, மத்யாணி, கருங்கால் கொன்றை, முருக்கு, அலரி, செம்பரத்தை, செந்திலகம், மருக்கொழுந்து
பிரமன் - அலரி
வைரவர் - செவ்வலரி
சூரியன் - தாமரை
முருகன் - வெட்சி, கடம்பு, முல்லை, குறிஞ்சி, மல்லிகை, காந்தள்
பார்வதி - நந்தியாவர்த்தனம் , நீலோற்பலம், தாமரை, சூரியகாந்தி, செம்பவளமல்லி
துர்க்கை - செவ்வெருக்கு சிவப்பு, அரலி, கொன்றைமலர்
இலக்குமி - நெய்தல், செந்தாமரை
சரஸ்வதி - வெண்தாமரை
அக்னி - வன்னி
சூரியன் - செந்தாமரை
சந்திரன் - வெள்ளரலி
செவ்வாய் - செண்பகம்
புதன் - வெண்காந்தள்
வியாழன் - முல்லை
வெள்ளி - வெண்தாமரை
சனி - கருங்குவளை
ராகு - மந்தாரை
கேது -செவ்வல்லி

பூஜையின் போது விலக்கப்பட வேண்டிய மலர்கள் :

விநாயகர் - துளசி
சிவன் - தாழம்பூ
விஷ்ணு - அட்சதை (எருக்கு, ஊமத்தம்பூ)
வைரவர் - நந்தியாவர்த்தனம் , மல்லிகை
சூரியன் - வில்வம்
பார்வதி - நெல்லி
துர்க்கை - அறுகு
இலக்குமி - தும்பைபூ
சரஸ்வதி – பவளம்

No comments:

Post a Comment