Tuesday, 10 November 2015

லக்ஷ்மீ தேவியை எதற்கு வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்?

லக்ஷ்மீ தேவியை எதற்கு வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்?

லக்ஷ்மீGoddess Lakshmi Devi தேவியை வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிரத்யேகமாக பூஜை செய்வதுண்டு. இந்த நாட்களில் தேவியை ப்ரஸன்னமாக்கி, அவளின் ஆசிகள் பெற வேண்டி விரதங்கள் மேற்கொள்வதுண்டு. லக்ஷ்மீதேவிக்கு ப்ரீதிகரமான ஸ்தோத்திரங்கள், ஸ்துதிகள் அன்றைய தினமே பாராயணம் செய்வார்கள். அன்றைய தினத்தில் சில பேர் உபவாசம் இருப்பார்கள். இந்த நாட்களில் மனிதர்கள் மட்டுமேயல்லாமல், புராணங்களில் ராட்சதர்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று லக்ஷ்மீதேவியை பூஜித்தார்கள் என்பதற்கு உதாரணமாக அனேக கதைகள் உள்ளன. முதலில் வெள்ளிக்கிழமை லக்ஷ்மீதேவி ஆராதனைக்கு அனுகூலமான தினமாக எதற்கு பெயர் பெற்றுள்ளது? ராட்சதர்கள் கூட அன்றைய தினமே ஏன் லக்ஷ்மீதேவியை பூஜித்தார்கள். அதுலேயும் ராட்சஸ ஸம்ஹரியான ஸ்ரீ விஷ்ணு மூர்த்தியின் பார்யையான லக்ஷ்மீதேவியை ராட்சதர்கள் பூஜிப்பதென்ன. இது போன்ற சந்தேகங்கள் வருவது சகஜம். இந்த சந்தேகங்களுக்கு பதில் என்னவென்றால்… ராட்சதர்களின் குரு சுக்கிராச்சாரியர். இந்த சுக்கிராச்சாரியார் பேரை மையமாக வைத்து தான் சுக்கிரவாரம் ஏற்பட்டதென்று புராணங்கள் சொல்லுகின்றன. இது போகட்டும், சுக்கிராச்சாரியாரின் தந்தை ப்ருகு மஹரிஷி. இந்த ப்ருகு மஹரிஷி ப்ரஹ்ம தேவரின் பிள்ளைகளில் ஒருவர். இவர் லக்ஷ்மீதேவியின் தந்தையும் கூட. அதனால்தான் லக்ஷ்மீதேவிக்கு பார்கவி என்று பெயர். இந்த வகையில் லக்ஷ்மீதேவிக்கு சுக்கிராச்சாரியார் சகோதரர். அதனால்தான் லக்ஷ்மீதேவிக்கு சுக்கிரவாரம் என்றால் ப்ரீதி. லக்ஷ்மீதேவியின் ரூபத்தில், வஸ்திர தாரணத்தில் நிறங்களுக்கு கூட முக்கியத்துவன் உண்டு. லக்ஷ்மீதேவிக்கு அதிகமாக சிவப்பு, பச்சை நிறத்தில் வஸ்திரங்கள் தரித்துள்ளதாக போட்டோக்களில் வரையப்பட்டதை காணலாம். சிவப்பு நிறம் சக்திக்கும், பச்சை நிறம் சாதனைக்கும். ப்ரக்ருதிக்கும் சின்னங்கள். ப்ரக்ருதிக்கு லக்ஷ்மீதேவி பிரதிநிதி. அதனால்தான் லக்ஷ்மீதேவியை அந்த இரண்டு நிற வஸ்திரங்களில் அதிகமாக சித்தரிக்கப்படுவதுண்டு. லக்ஷ்மீதேவி தங்க ஆபரணங்கள் போட்டுள்ளது போல் காட்டுவதுண்டு. தங்கம் ஐஸ்வர்யத்துக்கு அடையாளம். ஐஸ்வர்யத்துக்கு அதிதேவதை லக்ஷ்மீ தேவி என்பதால் அவளை தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பார்கள். விஷ்ணு பகவான் ஆராதனையிலும் லக்ஷ்மீதேவிக்கு முக்கியத்துவம் உண்டு. லக்ஷ்மீதேவி அனுக்ரஹமில்லாமல் விஷ்ணு மூர்த்தியின் அனுக்ரஹம் பெற முடியாது. லக்ஷ்மீதேவியின் க்ருபா கடாக்ஷம் இல்லாமல் விஷ்ணு பகவான் பக்தர்களுக்கு அனுக்ரஹிக்கமாட்டார். ஸதாசாரம், நன்னடத்தை லக்ஷ்மீதேவி ஆஹ்வானங்கள். இந்த இரண்டும் இருந்தால் முதலில் லக்ஷ்மீதேவியின் அனுக்ரஹம், பிறகு விஷ்ணு மூர்த்தியின் அனுக்ரஹம் கூட அடையலாம்.

No comments:

Post a Comment