Wednesday 3 February 2016

பசு வழிபாடு

பசு வழிபாடு !

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும்புண்ணியமாக
கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.பசுவின் உடலில்
ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர் களும் இருப்பதாக கருதுகின்றனர்.

*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்

*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,

*சிரம் – சிவபெருமான்

*நெற்றி நடுவில் – சிவசக்தி

*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்

*மூக்கினுள் – வித்தியாதரர்

*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்

*இரு கண்கள் – சந்திரர், சூரியர்

*பற்கள் – வாயு தேவர்

*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்

*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்

*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்

*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்

*கழுத்தில் – இந்திரன்

*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்

*மார்பில் – சாத்திய தேவர்கள்

*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு

*முழந்தாள்களில் – மருத்துவர்

*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்

*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்

*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்

*முதுகில் – உருத்திரர்

*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்

*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்

*யோனியில் – ஏழு மாதர்கள்

*குதத்தில் – இலக்குமி தேவி

*வாயில் – சர்ப்பரசர்கள்

*வாலின் முடியில் – ஆத்திகன்

*மூத்திரத்தில் – ஆகாய கங்கை

*சாணத்தில் – யமுனை நதி

*ரோமங்களில் – மகாமுனிவர்கள்

*வயிற்றில் – பூமாதேவி

*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்

*சடாத்களியில் – காருக பத்தியம்

*இதயத்தில் – ஆசுவனீயம்

*முகத்தில் – தட்சிணாக்கினி

*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்

*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில்
இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன.

அவைநந்தா, பத்திரை, சுரபி,
சுசீலை, சுமனை ஆகியவை. . இவைபொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம்கொண்டிருந்தன.

இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில்நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில்இருந்துவரும் கோமயம்(சாணம்), 
மூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகியஐந்தும் புனித
மானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில்கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது.

இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால்  முன் ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத்  தொழுவத்தில் காண்பது சுபசகுனம்.

தெருக்களில் கூட்டமாகப்
பார்த்தால்இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த
ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து
அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால்
கோலோகத்தை அடையும் பாக்கியம்உண்டாகும். வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின்வாசஸ்தலம்.
வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவதுகோலோகம்.

கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும்தெய்வங்களும்

1. முகம் மத்தியில்                      
சிவன்

2. வலக் கண்                              
சூரியன்

3. இடக் கண்                              
சந்திரன்

4. மூக்கு வலப்புறம்                     முருகன்

5. மூக்கு இடப்புறம்                     கணேசர்

6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்

7. கழுத்து மேல்புறம்                    
ராகு

8. கழுத்து கீழ்புறம்                       
கேது

9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா

10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதி, விஷ்ணு

11. முன்வலக்கால்                         பைரவர்       

12. முன் இடக்கால்                        ஹனுமார்

13. பின்னங்கால்கள்                      ப்ராசரர், விஷ்வாமித்திரர்

14. பின்னகால் மேல்பகுதி             நாரதர், வசிஷ்டர்

15. பிட்டம் - கீழ்ப்புறம்               
கங்கை

16. பிட்டம் - மேல்புறம்               
லக்ஷ்மி

17. முதுகுப்புறம்                           பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி   

18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி

19. வால் மேல் பகுதி                     நாகராஜர்

20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்

21. வலக்கொம்பு                           
வீமன்

22. இடக்கொம்பு                         இந்திரன்

23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை

24. முன்இடக்குளம்பு                      இமயமலை

25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை

26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை

27. பால்மடி                                      அமுதக்கடல்

பசு வழிபாடு வகை

வழிபாடு இரண்டு வகைப்படும்.

1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனைவிக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபடமுடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்துவழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தைமட்டும் வைத்து  வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்.

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடாவிட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே.

இரண்டாம் வகை பராமரிப்புவழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடுநடக்க முடியும்.கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன்பின் புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக  ஐதீகம்.

எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவைமுன்புறமாக
தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும்.
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில்
சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும்.

எனவேதான், அதிகாலையில்
சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வதுபராசக்திக்கு பூஜை செய்வதற்குச்சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலானமும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம்
என்றொருதெய்வம் உண்டு.
சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்திஇருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாகமனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்திஇருக்கிறாள். இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,
உயிர்கள்என அனைத்தையும் படைத்து,காத்து, ரட்சிப்பவளாக இருக்கிறாள்.

இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே, முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்டவசுக்களும், நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன.

கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்தஜாதி,மதம், மொழியும் தடையாக இராது.
(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும்;
குழந்தைபாக்கியம் உண்டாகும். கெட்டசக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள்நீங்கிவிடும்.

No comments:

Post a Comment